இரவு நேர வானம்! மெல்லிய செந்நிற படலம் இருளின் கறை படிந்து நிற்கிறது.
மேனி சிலிர்க்கும் சில்லென்ற குளிர்காற்று வீட்டினுள்ளே ஊடுருவி கள்ளத்தனம் புரிந்து கொண்டிருக்க, வெளியில் மழையின் உரத்த பேச்சுக்குரல்.
முருங்கைக்கிளை ஒன்று வானில் உயர்ந்து நின்று காற்றின் பேச்சுக்கு துள்ளிக்குதித்து தாரைபோல் பொழியும் மழை நீரில் தள்ளாடிக்கொண்டிருக்க, எங்கும் கும்மிருட்டு!
வாழை இலை ஒன்று என்னை வா! வா! என்று சைகை செய்ய, வீட்டினுள்ளே இருந்து பார்த்த எனக்கு வியப்பு!